ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
புதுமுகங்கள் தேவை படத்தின் மூலம் நடிகராகியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவ். இனி தொடர்ந்து நடிக்கப்போவதாக சொல்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது, புதுமுகங்கள் தேவை படத்திற்கு ஒளிப்பதிவு செய்யத்தான் சென்றேன். அந்தப் படத்தில் நடிக்க வேண்டிய ஒருவர் கடைசி நேரத்தில் சம்பள பிரச்னை காரணமாக நடிக்காமல் விலகினார். உடனே தயாரிப்பாளரும், இயக்குனரும் நீங்களே நடியுங்கள், உங்களுக்கு அந்த கேரக்டர் பொருத்தமாக இருக்கும் என்று கூறினர். அதனால்தான் நடித்தேன். இப்போது எல்லோரும் என் நடிப்பை பாராட்டுகிறார்கள். நிறைய வாய்ப்புகளும் வருகிறது. அதனால் தொடர்ந்து நடிக்க முடிவு செய்திருக்கிறேன். பிசியான நடிகரானாலும் ஒளிப்பதிவை கைவிட மாட்டேன். தற்போது இரண்டு படங்களில் பணியாற்றி வருகிறேன். அவற்றில் ஒன்று ஆவிகுமார். இது ஒளிப்பதிவாளருக்கு சவலான பேய் படம். இந்தப் படங்களை முடித்துக் கொடுத்துவிட்டு மீண்டும் நடிப்பேன் என்றார்.