விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
சினிமா உலகத்தில் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும் என்பார்கள். அதை சரியாக செய்து வருகிறார் வடிவேலு. கடந்த தேர்தலுக்குப்பிறகு சினிமாவில் வாய்ப்பில்லாமல் மதுரைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவ்வப்போது மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று செய்தி வெளியிட்டு வரும் அவர், இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஆப்பிரிக்காவில் வடிவேலு போன்ற படங்களில் நடிக்கயிருப்பதாகவும் கூறி வந்தார்.
ஆனால் ஆறு மாதமாக இப்படித்தான் சொல்லி வருகிறார். எதுவும் நடந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் கதை விவாதம் நடப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகிறார் வடிவேலு. அதோடு அந்த படத்தின் வேலைகளை பொங்கலுக்குப்பிறகு தொடங்கயிருப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால் தற்போது அதை யாரும் நம்புவதாக இல்லை. இவர் சொல்வதெல்லாம் புலி வருவது கதை போல்தான் என்கிறார்கள்.