கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சினிமா உலகத்தில் தூங்கும்போதுகூட காலை ஆட்டிக்கொண்டே தூங்க வேண்டும் என்பார்கள். அதை சரியாக செய்து வருகிறார் வடிவேலு. கடந்த தேர்தலுக்குப்பிறகு சினிமாவில் வாய்ப்பில்லாமல் மதுரைக்கும், சென்னைக்கும் பறந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில், அவ்வப்போது மீண்டும் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று செய்தி வெளியிட்டு வரும் அவர், இம்சை அரசன் படத்தின் இரண்டாம் பாகம் மற்றும் ஆப்பிரிக்காவில் வடிவேலு போன்ற படங்களில் நடிக்கயிருப்பதாகவும் கூறி வந்தார்.
ஆனால் ஆறு மாதமாக இப்படித்தான் சொல்லி வருகிறார். எதுவும் நடந்தபாடில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் கதை விவாதம் நடப்பதாக செய்தி வெளியிட்டு பரபரப்பு கூட்டி வருகிறார் வடிவேலு. அதோடு அந்த படத்தின் வேலைகளை பொங்கலுக்குப்பிறகு தொடங்கயிருப்பதாகவும் கூறி வருகிறார். ஆனால் தற்போது அதை யாரும் நம்புவதாக இல்லை. இவர் சொல்வதெல்லாம் புலி வருவது கதை போல்தான் என்கிறார்கள்.