ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ஜெயா டிவியில் தினந்தோறும் மாலை 6.30 மணிக்கு சுவாமியே சரணம் ஐயப்பா என்ற பக்தித் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஐயப்ப பக்தன் அழகனுக்கு மல்லிகா, சீதா என 2 மகள்கள். காட்டில் உள்ள ஒரு விசேஷ மூலிகையினால் எல்லோருக்கும் இலவச சிகிச்சை அளிக்கிறான். அழகன். அந்த அபூர்வ மூலிகையின் ரகசியத்தைப் பெற கேசவன் என்பவனும் மந்தாகினி என்ற அவனது தோழியும் சகல விதமான முயற்சிகளையும் செய்கிறார்கள். முதல் கட்டமாக அழகனின் குழந்தைகள் இருவரையும் சித்ரவதை செய்கிறார்கள். வேதனை பொறுக்காத குழந்தைகளின் அழுகுரல் கேட்டு உடனடியாக ஐயப்பன் அவர்களுக்கு உதவினார் என்பது புராணம். தொடரை, ஸ்ரீசுப்பிரமணியம் என்டர்பிரசஸ்சுக்காக எஸ்.கார்த்திகேயன் தயாரிக்கிறார். கதை:சரவணன். வசனம்: கே.பி.அறிவானந்தம். ஹர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி, சஞ்சய், மீனாகுமாரி, கே.ஆர்.விஜயா, டில்லி கணேஷ், பிரவினா, ஓ.ஏ.கே.சுந்தர் ஆகியோரும் உண்டு. டைரக்டர் துளசிதாஸ் இயக்குகிறார்.