ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வந்த வேகத்திலேயே சில நடிகைகள் மாநில விருது, தேசிய விருது என்று வாங்குவதைப்பார்த்து உள்ளுக்குள் குமுறிப்போய் இருக்கிறார் அனுஷ்கா. அதன் வெளிப்படாக, சும்மா மரத்தைச்சுற்றி டூயட் பாடும் நடிகைகளெல்லாம் தேசிய விருதுகளை சமீபகாலமாய் தட்டிச்செல்கிறார்கள். அதைப்பார்க்கையில், சவாலான வேடங்களில் நடிக்கும் எனக்கு படத்துக்குப்படம் விருது கொடுத்தால்கூட தகும். ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளாததுதான் வேதனையாக உள்ளது என்கிறார் அனுஷ்கா.
மேலும், இப்போது தான் இரண்டாம் உலகம் படத்தில் மிக வித்தியாசமான இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லும் அனுஷ்கா, இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு கிடைக்காவிட்டால் நான் விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன் என்றும் ஆவேசத்துடன் சொல்கிறார். அதற்காக, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொந்த குரலில் டப்பிங் பேசாத அனுஷ்கா, இப்போது முதன்முறையாக இரண்டாம் உலகம் படத்தில் பேசுவதற்காக தமிழை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்.