மோசடி புகாரில் சிக்கிய கேரள நடிகை ஷாலுமேனன்! | வணக்கம் சென்னை ஆடியோ விழாவில் கருணாநிதி கலந்து கொள்கிறாராம்! | சினிமா வாய்ப்புகளுக்காக அலையவில்லை என்கிறார் சினேகா! | சமுத்திரகனியுடன் இணைகிறார் ஜீவா! | தமிழ் ஆசான்களிடம் சிக்கிய ஐ பட நாயகி எமிஜாக்சன்! | பிகினி உடையில் திரியும் நமீதா! | விரைவில் சித்தார்த்-சமந்தா திருமணம்! | மேல்முறையீடுக்கு செல்கிறது மரியான்! | ஸ்ருதி ஹாசனுக்கு அடித்தது அதிர்ஷ்டம் | அரசியலில் திவ்யா செல்வாக்கு கிடு கிடு |
வந்த வேகத்திலேயே சில நடிகைகள் மாநில விருது, தேசிய விருது என்று வாங்குவதைப்பார்த்து உள்ளுக்குள் குமுறிப்போய் இருக்கிறார் அனுஷ்கா. அதன் வெளிப்படாக, சும்மா மரத்தைச்சுற்றி டூயட் பாடும் நடிகைகளெல்லாம் தேசிய விருதுகளை சமீபகாலமாய் தட்டிச்செல்கிறார்கள். அதைப்பார்க்கையில், சவாலான வேடங்களில் நடிக்கும் எனக்கு படத்துக்குப்படம் விருது கொடுத்தால்கூட தகும். ஆனால் என்னை யாரும் கண்டு கொள்ளாததுதான் வேதனையாக உள்ளது என்கிறார் அனுஷ்கா.
மேலும், இப்போது தான் இரண்டாம் உலகம் படத்தில் மிக வித்தியாசமான இரட்டை வேடங்களில் நடிப்பதாக சொல்லும் அனுஷ்கா, இந்த படத்தில் எனக்கு விருது கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு கிடைக்காவிட்டால் நான் விருது கமிட்டி மீதே போர் தொடுப்பேன் என்றும் ஆவேசத்துடன் சொல்கிறார். அதற்காக, இதுவரை எந்த தமிழ் படத்திலும் சொந்த குரலில் டப்பிங் பேசாத அனுஷ்கா, இப்போது முதன்முறையாக இரண்டாம் உலகம் படத்தில் பேசுவதற்காக தமிழை மனப்பாடம் செய்து கொண்டிருக்கிறார்.