மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
தீண்ட தீண்ட என்ற படத்தை இயக்கிய ஏ.பி.முகன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தயாரித்து இயக்கும் படம் விடியும் வரை பேசு. அனித் ஹீரோவாகவும், நன்மா, வைதேகி ஹீரோயினாகவும் அறிமுகமாகிறார்கள். மிஸ்டுகாலால் ஏற்படும் பிரச்சினைகளைச் சொல்லும் படமாம். அதுபற்றி இயக்குனர் முகன் கூறியதாவது: செல்போனை கண்டுபிடித்தவன் வெள்ளைக்காரன். மிஸ்டுகாலை கண்டுபிடித்தவன் தமிழன். கிராமத்திலிருந்து சென்னைக்கு ஐ.டி கம்பெனிக்கு வேலைக்கு வரும் இளைஞனுக்கு ஒரு மிஸ்டுகால் வருகிறது. அதில் பேசினால் ஒரு இளம் பெண் பேசுகிறாள். பார்த்துக்கொள்ளாமலே இருவரும் பேசிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவள் பேச்சை கேட்ககாவிட்டால் இவனுக்கு பைத்தியம் பிடித்தமாதிரி ஆகிறது. இப்படிப்போகும் கதையில் கடைசியில் என்னாகிறது என்பது கிளைமாக்ஸ். இன்றைக்கு பாதி பாலியல் தவறுகளுக்கு காரணம் பெண்கள் என்றால் செல்போன். ஆண்கள் என்றால் மது இதை ஆணித்தரமாக சொல்கிறோம். படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. பிப்ரவரி மாதம் ரிலீஸ் என்கிறார்.