ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சரத்குமார், மேக்னா நாயுடு நடித்த வைத்தீஸ்வரன் படத்தை இயக்கிய ஆர்.கே.வித்யாதரன் இயக்கி உள்ள படம் கடைசி காதல் கதை. இதில் வர்மா படத்தில் நடித்த ஆகாஷ் பிரேம்குமார், ஷாலு ஷம்மு, சாம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளர். படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.
இதில் கலந்து கொண்டு இயக்குனர் கே.பாக்யராஜ் பேசியதாவது: தினமும் சாமி கும்பிடும்போது பொதுவான வேண்டுதல் எதையாவது சாமியிடம் கேட்பேன். கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்ற வேண்டினேன். தியேட்டர் திறந்த பிறகு மக்கள் தியேட்டருக்கு வரவேண்டும் என்று வேண்டினேன். இப்போது வரவேண்டாம் என்று வேண்டலாமா என்று யோசிக்கிறேன்.
காரணம் இப்போது சில படங்கள் பார்த்த பின்பு தியேட்டர் திறக்காமலே இருந்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. நல்ல படங்களை வரவேற்கலாம். ஆனால் தவறான உதாரணங்கள் கொண்ட படங்களை வரவேற்கிறோம் என்பது கொஞ்சம் வருத்தம் அளிக்கிறது. அவர்களும் மக்கள் இதைத்தான் ரசிக்கிறார்கள் என்று மக்கள் மீது பழியை போட்டு தவறான படங்களை எடுக்கிறார்கள். பொது நல வழக்கு போடும் அளவிற்கு மன உளைச்சலாக இருக்கிறது. என்றார்.
ஆனால் அது என்ன படங்கள் என்றோ, எந்த மாதிரியான படங்கள் என்றோ அவர் குறிப்பிடவில்லை.