நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
திருப்பூரில் பனியன், ஜட்டி தயாரிக்கும் தொழிற்சாலை வைத்திருக்கும் கோவல் சுவாமிநாதன் தயாரிக்கும் படம் புதுமுகங்கள் தேவை. சிவாஜிதேவ், பானு, ராஜேஷ் யாதவ் நடிக்கிறார்கள். மனீஷ் பாபு இயக்குகிறார். இந்தப் படம் சினிமாவை கிண்டல் செய்து எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இயக்குனர் மனீஷ்பாபு அளித்த விளக்கம்.
ஒரு புதுமுக தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர்கள் இணைந்து ஒரு உப்புமா படம் தயாரித்தால் எப்படி இருக்கும் என்பதை காமெடியாகச் சொல்லும் படம். சினிமாவில் உள்ள சில கசப்பான விஷயங்களை காமெடியாகச் சொல்கிறோம். மற்றபடி சினிமாவையே தனிப்பட்ட யாரையுமோ கிண்டல் செய்து எடுக்கவில்லை. இதில் பானு ஒரு நடிகையாகவே வருகிறார். பந்தா பண்ணும் நடிகைகளை அப்படியே பிரதிபலிப்பார். சினிமாவில் மட்டும் காமெடியில்லை. சினிமா தயாரிப்பதும் கமெடிதான். படம் பாருங்கள் அது தெரியும் என்கிறார். மனீஷ் பாபு.