ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தமிழில் எத்தனையோ படங்களில் நடித்திருந்தபோதும் நீர்ப்பறவைதான் சுனைனாவை ஒரு நல்ல நடிகையாக அடையாளம் காட்டியது. அதனால் அந்த படத்துக்குப்பிறகு கோடம்பாக்கத்தில் நாமும் முன்னணி நடிகையாகி விடுவோம் என்று மனசு நிறைய நம்பிக்கை வைத்திருந்தார் அவர். அதனால் படம் திரைக்கு வந்தபிறகு முன்னணி இயக்குனர்கள் வீட்டுக்கதவை தட்டுவார்கள் என்றும் ஆவலுடன் இருந்தார். ஆனால் இதுவரை புதிய படம் விசயமாக ஒருவர்கூட அவர் வீட்டுப்பக்கம் தலைகாட்டவில்லையாம்.
இதனால் பலத்த ஏமாற்றம் அடைந்திருக்கிறார் சுனைனா. அதோடு இதுவரை திறமையான நடிகைகளுக்கு கோலிவுட்டில் மரியாதை கிடைக்கும் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கேற்ற வாய்ப்பு கிடைத்து நடிப்பில் முத்திரை பதித்தபோதும் ஒரு படம் கூட கிடைக்காதது வேதனையாக உள்ளது என்று கூறி வருகிறார். மேலும், இவர்களைப்பொறுத்தவரை நடிகைகள் திறமையை வெளிப்படுத்துவதை விட, உடம்பை வெளிப்படுத்தி நடித்தால்தான் மதிப்பார்கள் போல் தெரிகிறது. அதனால் இனி நானும் ஊரோடு ஒத்துப்போகப்போகிறேன். அதிரடி கிளாமர் படங்களாக செலக்ட் பண்ணி நடித்து பணம் சம்பாதிக்கப்போகிறேன் என்றும் வெறுப்புடன் பேசுகிறார் சுனைனா.