சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
கமலுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த மூன்றாம் பிறை படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதில் மீண்டும் கமல்-ஸ்ரீதேவியை நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. பாலுமகேந்திரா இயக்கத்தில் கமல்-ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான படம் மூன்றாம் பிறை. இப்படத்தில் ஆசிரியராக கமலும், ஒரு விபத்தில் பழைய நினைவுகளை மறந்து மனநிலை பாதித்த பெண்ணாக ஸ்ரீதேவியும் நடித்து இருந்தனர். அழகான காதல் கதையை சொல்லி இருந்தார் பாலு மகேந்திரா. இப்படத்தின் க்ளைமாக்ஸ் அனைவரையும் வியக்க வைத்தது. படத்திற்கு இளையராஜாவின் இசையும் பெரிதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி இப்படத்திற்காக கமலுக்கு தேசிய விருதும் கிடைத்தது. மேலும் இப்படம் இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டானது.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தற்போது முயற்சிகள் நடந்து வருகிறது. இதில் மீண்டும் கமல், ஸ்ரீதேவி ஆகியோரையே நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்று கருதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.