விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
லட்சுமிகரமான ராய் நடிகையின் பெல்காம் வீட்டில் அவருக்காக பரிகார பூஜை ஒன்று நடந்திருக்கிறது. 2013ம் ஆண்டு அவருக்கு ஒரு பெரிய கண்டம் இருப்பதாகவும், அதற்கு பரிகார பூஜை ஒன்று நடத்த வேண்டும் என்றும் குடும்ப ஜோதிடர் கொழுத்திப்போட பயந்துபோன ராயின் பெற்றோர்கள் அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சென்னையில் ஒன்பதுல குரு படப்பிடிப்பில் இருந்தவர் ஒரு நாள் லீவு போட்டுவிட்டு பெல்காம் பறந்து திருப்பியிருக்கிறார். திரும்பி வந்தவர் காலில் பெரிதாக கருப்பு கயிறு ஒன்று புதிதாக கட்டப்பட்டிருந்தது. விபரம் கேட்டவர்களிடம் "சும்மா திருஷ்டிகளிப்புதான்" என்று சொல்லியிருக்கிறார். "பரிகார பூஜைக்குதானே போய்விட்டு வந்தீர்கள்?" என்று கேட்டதற்கு "அப்படியெல்லாம் இல்லை. என் அக்கா திருமணம் நடக்க இருக்கிறது. எங்க குடும்ப வழக்கப்படி திருமணம் நல்லபடியா நடிக்க யாகம் ஒன்று நடத்துவோம். அதற்குத்தான் போயிட்டு வந்தேன்" என்று சொல்லியிருக்கிறார்.
எதுவா இருந்தாலும் அழகுக்கு ஆபத்து வராம இருந்தா சரி...!!