ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இசையமைப்பாளர் இளையராஜா தற்போது சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருக்கிறார். ஒரு பாடலின் சூழலை விளக்கி, அதற்கான மெட்டையும் பதிவேற்றம் செய்துள்ளார். அந்த மெட்டுக்குரிய பாடலை எழுதி அனுப்புமாறு அவர் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: ஒரு ஆணோ அல்லது பெண்ணோ தனது காதலியோ அல்லது காதலனையோ சந்திக்க செல்கிறார். அப்போது அங்கு நீங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நபர் நீண்ட நேரமாக வரவில்லை. அந்த சமயத்தில் உள்ள மனநிலையை கொண்டு பாடல் வரிகளை எழுத வேண்டும். பாடல் வரிகள் எந்த மொழியில் இருந்தாலும் பரவாயில்லை, என்று தெரிவித்துள்ளார்.