ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
வழக்கமான, போலீஸ்-வில்லன் துரத்தல் கதை தான், இதுவும். ஆனாலும், "இதற்கு முன், எந்த படத்திலும், பார்க்காத அளவுக்கு, விறு விறுப்பான காட்சிகளும், பரபரப்பான திருப்பங்களும், இந்த படத்தில் இருக்கும் என, பயங்கரமான, "பில்டப் கொடுக்கின்றனர், படக் குழுவினர். மும்பையில், உள்ள டிஸ்கோ கிளப் உரிமையாளர்களின், சட்ட விரோத செயல்களை அம்பலப்படுத்த, ஒரு போலீஸ் அதிகாரி களம் இறங்குகிறார். அதில், படு பயங்கரமான பல உண்மைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன. இது தான், படத்தின் ஒன்லைன். சச்சின் ஜோஷி, கிகானா கான், ஆதித்ய பஞ்சோலி போன்ற, இந்தி பிரபலங்களுடன், நம்ம ஊர், பிரகாஷ் ராஜ், விமலா ராமன் ஆகியோரும், இந்த படத்தில் உள்ளனர். அங்குஷ் பட், படத்தை இயக்கியுள்ளார். அவர் கூறுகையில்,"நாட்டின், மற்ற நகரங்களிலிருந்து, மும்பை, சற்று வித்தியாசமானது. இங்கு வசிக்கும் ஒவ்வொருவரும், ஏதாவது ஒரு அபாயத்துக்குள் சிக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த பின்னணியை பற்றித் தான், படத்தில் கூறியுள்ளோம் என்கிறார்.