ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பரத்பாலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படம் மரியான். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூ படத்தில் நடித்த மலையாள நடிகை பார்வதி நடிக்கிறார். பொதுவாக முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் நடிகைகள், அந்த நடிகர்களுடன் சகஜமாக பேசுவார்கள். ஆனால் பார்வதியோ தனுஷை பார்த்தால் ஒரு வணக்கம் கூட போடுவதுகிடையாதாம். டைரக்டர் பரத்பாலாவிடம் ரொம்ப ஒட்டி உறவாடுகிறாராம். இதனால் தனுஷ்க்கு ஒரு வருத்தமாம். இந்தநிலையில், ஒரு காட்சியில் பார்வதியை எட்டி உதைப்பது போன்று தனுஷை நடிக்க சொன்னபோது, நிஜமாலுமே மொத்த பலத்தையும் ஒன்றுதிரட்டி பார்வதியை ஓங்கி மிதித்து விட்டராம். இதனால் காலை பிடித்துக்கொண்டு, என்ற குருவாயூரப்பா என்று அபய குரல் எழுப்பியபடி ஓவென்று அழுது விட்டாராம் பார்வதி. ஆனால் அதற்கு ஒரு ஸாரிகூட சொல்லவில்லையாம் சுள்ளான். இத்தனை நாளும் அடக்கி வைத்திருந்த ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்ட உடனே ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப்பாகி விட்டாராம்.