ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளவம் வாங்கும் நடிகை நயன்தாரா தான் என்று கோலிவுட் வட்டாரங்கள் சொல்கின்றன. தமிழில் ஒரு படத்தில் நடிப்பதற்கு சுமார் 5 கோடி வரை சம்பளமாக வாங்குவதாகச் சொல்கிறார்கள். மற்ற முன்னணி நடிகைகள் வாங்கும் சம்பளத்தை விட இது இரு மடங்கு அதிகமும் என்பது கூடுதல் தகவல். தெலுங்கில் நயன்தாரா தற்போது சிரஞ்சீவி நடிக்கும் 'காட்பாதர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்காக நயன்தாராவிற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள 'லூசிபர்' படத்தின் ரீமேக் தான் இந்த 'காட்பாதர்'. மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கிறார். படம் முழுவதும் இடம் பெறாத குறைவான காட்சிகள் கொண்ட கதாபாத்திரம்தான். இருந்தாலும் நயன்தாராவைத்தான் நடிக்க வைக்க வேண்டும் என சிரஞ்சீவி சொன்னதாக டோலிவுட்டில் தகவல் உண்டு. அதனால்தான் இவ்வளவு சம்பளம் கேட்டாலும் கொடுக்கிறார்களாம்.
தெலுங்கில் ஒரு படத்திற்காக ஒரு கதாநாயகிக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகபட்ச சம்பளம் இது என்கிறார்கள்.