ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி உள்ள ராகினி திவேதி இப்போது படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கி உள்ளார். அவர் நடித்து இடையில் நிறுத்தப்பட்ட காந்திகிரி படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கி உள்ளது. இது தவிர சாரி: கர்மா ரிட்டன் என்ற படத்தில் நடிக்கிறார். இது பெண்ணை கதை களமாக கொண்ட படம். முதன் முறையாக இந்த படத்தில் ராகினி ஆக்ஷன் ஹீரோயினாக நடிக்கிறார். க்ரைம் த்ரில்லர் கதை.
இது தவிர பிரம்மா இயக்கும் ராணா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறார். இந்த பாடல் காட்சி பெரிய பட்ஜெட்டில் தயாராகிறது. பெங்களூரை அடுத்த ஹேமாகள்ளி கிராமத்தில் பிரமாண்ட கிராம திருவிழாவை நடத்தி இந்த பாடலை படமாக்க திட்டமிட்டிருந்தனர். புனித் ராஜ்குமார் மறைவால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. அடுத்த வாரம் படப்பிடிப்புகள் நடக்கிறது.