மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? |
வசூலைக்குவித்து கொண்டு இருக்கும் "துப்பாக்கி தந்த உற்சாகத்தில் இருக்கிறார், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இயக்கிய ஏழு படங்களும் வெற்றி. என்றாலும் வெற்றியின் தலைக்கனம் இவரிடம் இல்லை. அமைதியான தோற்றத்துடன், அருமையான புன்முறுவலுடன், யதார்த்த மனிதராய்த் தெரிகிறார். விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பிறந்தவர். திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் வரலாறு பாடத்தில், இளங்கலை பட்டம் பெற்று உள்ளார். சினிமாவில் சாதிக்கும் லட்சியத்துடன், சென்னைக்கு ரயில் ஏறியவர். தனி ஆளாக போராடி, காலுன்றி, இன்று உச்சத்தை தொட்டு விட்டார். எல்லா நடிகர்களுக்கும், இவர் படத்தில் நடிப்பது என்பது ஒரு கனவு. மதுரை வந்தவர், நம்மோடு பேசியதில் இருந்து...
* கல்லக்குறிச்சியில் இருந்து சென்னைக்கு சென்று சாதித்தது எப்படி?
திருச்சியில் கல்லூரி படிப்பை முடித்ததும், கனவு உலகமான சினிமாத்துறைதான் கண்முன் தோன்றியது. சென்னைக்கு கிளம்பி விட்டேன். கலைமணி இயக்கிய மக்களாட்சி, உதயசங்கர் இயக்கிய பூச்சுடவா, சூர்யா இயக்கத்தில் குஷி, வாலி போன்ற ஏராளமான படங்களில், உதவி இயக்குனராக பணிபுரிந்தேன்.
* எப்படி அஜீத்..."தீனா ஆனார்?
வாலி படத்தில் பணிபுரிந்த போது, அஜீத்துடன் பழக்கம். 2001 காலகட்டத்தில் பல புதிய இயக்குனர்களை அவர் அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தார். அவர் மூலம் "தீனாவை இயக்கும் வாய்ப்பு கிட்டியது. அஜீத், சுரேஷ்கோபி நடித்த அப்படம் "ஹிட் ஆகி, என்னை பற்றி பேச வைத்தது.
* உங்கள் "ரமணா, விஜயகாந்திற்கு பெரும் மாற்றத்தை உருவாக்கியதே...?
போலீஸ், கிராமத்து சப்ஜெக்ட்டிலிருந்து வித்தியாசமாக ஒரு படம் செய்ய வேண்டும் என, நடிகர் விஜயகாந்த் விரும்பினார். அதன்படி ரமணாவை இயக்கினேன். அவரும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார். அந்தக் கதை ரசிகர்களுக்கு பிடிக்கும் என, எதிர்பார்த்தேன். படத்தை ரசிகர்கள் வெற்றி பெறச் செய்தனர். பழிக்குப்பழி வாங்கும் கதைகள் ரசிகர்களிடம் என்றைக்குமே வரவேற்பை பெறும். அதை சற்று வித்தியாசமாக மாற்றினால், மேலும் சிறப்பாக இருக்கும் என, திட்டமிட்டேன். அதன்படி, "கஜினி வெளியானது. இந்தியிலும் படம் படு ஹிட்.
* "துப்பாக்கி ஹிட் ஆகும் என எதிர்பார்த்தீர்களா?
நடிகர் விஜய் ஒரு "மாஸ் ஹீரோ. வழக்கமான கமர்ஷியல் படங்களிலிருந்து மாறுபட்டிருக்க வேண்டும் என, விரும்பினார். அதன்படி துப்பாக்கியை இயக்கினேன். மும்பையில் ரியல் லொகேஷனில் விஜய் நன்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்தார். திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி தான். இதற்காக விஜய் உற்சாகம் தெரிவித்தார். அவரது தாய், தந்தை, மனைவி, ஏன் குழந்தைகள் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்ததை மறக்க இயலாது. இந்தியில் அக்ஷய்குமாரை வைத்து இப்படத்தை இயக்கவுள்ளேன்.
* இயக்கிய படங்களில் உங்களுக்கு பிடித்தது...?
ஏழாம் அறிவு. வித்தியாசமான படம். அறிவியல் ரீதியாக வரலாற்று தகவல்களுடன் நிறைய விஷயங்களுடன் வெளிவந்தது.
* உங்கள் "ஹிட் ரகசியம் என்ன?
மக்கள் ரசனைக்கு ஏற்ப, அடுத்து என்ன வரும் என, யூகிக்க முடியாதளவு படங்களை கொடுக்கும் போது "ஹிட் ஆகிறது. என் படங்களில், இதில் கவனமாக உள்ளேன்.
* இயக்குனர்கள் நடிகர்களாகும் காலம் இது... நீங்கள்..?
அந்த எண்ணம் இல்லை.
* கமல், ரஜினியை எப்போது இயக்க போகிறீர்கள்?
காலமும் கதையும் கைகூடினால் கட்டாயம் இயக்குவேன்.