Advertisement

சிறப்புச்செய்திகள்

சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஓட்டலில் அடிதடி! சயீப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

22 டிச, 2012 - 13:00 IST
எழுத்தின் அளவு:

மும்பை நட்சத்திர ஓட்டலில், தகராறில் ஈடுபட்டு, வர்த்தகர் ஒருவரை தாக்கிய வழக்கில், பாலிவுட் நடிகர் சயீப் அலிகான் மீது, மும்பை போலீசார் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான், சில மாதங்களுக்கு முன், நடிகை கரீனா கபூரை திருமணம் செய்து கொண்டார். இருவரும் காதலர்களாக இருந்த போது, அடிக்கடி நட்சத்திர ஓட்டல்களில் சந்தித்து கொண்டனர். அந்த வகையில், பிப்ரவரி, 22ம் தேதி, மும்பையில் உள்ள தாஜ் ஓட்டலில் உள்ள வசாபி ரெஸ்டாரன்ட்டுக்கு கரீனா கபூருடன் சென்றார். அவர்களுடன், கரீனாவின் சகோதரி கரீஷ்மா மற்றும் சில நண்பர்கள் சென்றனர். அங்கு நடந்த விருந்தில், அவர்கள் அரட்டை அடித்து மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்களது அரட்டை கச்சேரி, அதே ரெஸ்டாரன்ட்டுக்கு வந்திருந்த, தென் ஆப்பிரிக்க வர்த்தகரான இக்பால் மிர் ஷர்மாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அவர், தன் மாமனாருடன் அங்கு சாப்பிட வந்திருந்தார்.

ஒரு கட்டத்தில், சயீப் குழுவினரின் கூச்சலை பொறுக்க முடியாமல், சயீப் அலிகான் குழுவினரை பார்த்து, அமைதியாக இருக்கும்படி ஷர்மா கேட்டுள்ளார். அது, வாக்குவாதமாகி தகராறில் முடிந்துள்ளது. சயீப்பும், அவரது நண்பர்களும் சேர்ந்து ஷர்மாவை தாக்கியுள்ளனர். இது குறித்து, மும்பை, கொலபா போலீஸ் நிலையத்தில், ஷர்மா புகார் செய்தார்.

புகாரை பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், சயீப் அலிகான் மற்றும் அவரது நண்பர்கள், ஷகில், பிலால் மீது மும்பை பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட்டில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 29 பேர் அளித்த வாக்குமூலம் இடம் பெற்றுள்ளது.ஏற்கனவே இந்த வழக்கில், சயீப்பும் அவரது நண்பர்கள் இருவரும், தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் பெற்றுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ஹிருத்திக் ரோஷன் க்ரிஷ்- 4 : பவர்புல் வில்லனாக மாறும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

sachin - india  ( Posted via: Dinamalar Android App )
22 டிச, 2012 - 14:23 Report Abuse
sachin so arrogant attitude of Saif. Need to take action for breaking law
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)

பேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்

Advertisement
Advertisement
இதையும் பாருங்க !

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in