சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது |
பிரபல நடிகர் மோகன்லால் நடித்த, மலையாள திரைப்படத்திற்கான போஸ்டரில், அவர் சிகரெட் பிடிப்பது போன்ற படம் இடம் பெற்றிருந்ததால், அவர் மீதும், படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீதும், கேரள அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. "திரைப்படங்களில் புகை பிடிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், திரைப்படங்களை விளம்பரப்படுத்த ஒட்டப்படும் போஸ்டர்களில், அதுபோன்ற காட்சிகள் இடம் பெறக்கூடாது என, 2011 அக்டோபர், 23ம் தேதி, மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், "பாதுகாப்பான திருவனந்தபுரம் என்ற பெயரில், மாநில அரசின் சுகாதாரத் துறை அதிகாரிகள், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், மலையாள நடிகை மைதிலி நடித்த திரைப்படத்தில், அவர் புகைப்பிடிப்பது போல, இடம் பெற்றிருந்த காட்சிகள், போஸ்டர்களாக தயாரிக்கப்பட்டு, நகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இந்தப் போஸ்டர்களை அகற்றிய, சுகாதாரத் துறை அதிகாரிகள், நடிகை மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளனர்.இதற்கு பின், பிரபல நடிகர் மோகன்லால் நடித்து நேற்று வெளியான, "கர்மயோதா என்ற மலையாள திரைப் படத்திற்கான போஸ்டர்களிலும், அவர் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.
இதை பார்த்த, மாநில சுகாதார துறை அதிகாரிகள், அந்த சுவரொட்டிகளை அகற்ற நடவடிக்கை எடுத்ததோடு, நடிகர் மோகன்லால், படத்தின் இயக்குனர், மேஜர் ரவி, தயாரிப்பாளர் மற்றும் திரைப்படம் வெளியாகி உள்ள தியேட்டர்களின் மேலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளனர். அதன்படி, வழக்கு பதியப்பட்டுள்ளது.இந்த வழக்கில், குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டாண்டு சிறை அல்லது, 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம். நாட்டிலேயே, முதல் முறையாக கேரளாவில்தான் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.