ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் |
சென்னை: கமலின், "விஸ்வரூபம் படம், டி.டி.எச்., முறையில் வெளியிடுவதற்கு, எதிர்ப்பு தெரிவித்து அப்படத்தை தியேட்டரில் வெளியிட ஒத்துழைப்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தடை விதிப்பது குறித்து, சினிமா சங்கங்களின் கூட்டுக் கூட்டம், சென்னையில், இன்று நடக்கிறது. கமல் தயாரித்து, நடிக்கும், விஸ்வரூபம் படம், தியேட்டர்களில் வெளியிடுவதற்கு, 8 மணி நேரம் முன், டி.டி.எச்., முறையில், "டிவியில், வெளியிட, தனியார் டி.டி.எச்., நிறுவனத்துடன், கமல் ஒப்பந்தம் செய்துள்ளார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இப்புதிய வசதிக்கு, தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் தயாரிப்பாளர்களில், ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்னை தொடர்பாக, இறுதி முடிவு எடுக்க, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் தமிழக திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்தின் கூட்டுக் கூட்டம், சென்னையில் நேற்று முன் தினம் மாலை நடப்பதாக இருந்தது. கூட்டம், திடீரென ரத்து செய்யப்பட்டது. இது குறித்து, தமிழக தியேட்டர் உரிமையாளர்கள் சங்க இணை செயலாளரிடம் கேட்டபோது,"" சென்னையில் நடந்து வரும், சர்வதேச படவிழாவின் நிறைவு விழா காரணமாக, கூட்டு கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இன்று(நேற்று) நடக்கும், கூட்டத்தில், விஸ்வரூபம் படம், வெளியிடுவது குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.
இதனைதொடர்ந்து நேற்று திரைப்பட விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இந்தப் பிரச்னை தொடர்பாக நடந்த அவசரக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஸ்வரூபம் படத்தை தியேட்டர்களில் வெளியிட ஒத்துழைப்பதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.