மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
சொகுசு கப்பலில் போதை விருந்தில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்பட 8 பேர் அதிரடி சோதனையில் பிடிபட்டு கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து, தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் இருக்கும் ஆர்யன் கான் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுளார்.
சிறையில் இருக்கும் மகனின் கை செலவுக்காக ஷாருக்கான் 4500 ரூபாய் மணியார்டர் அனுப்பி உள்ளார். சிறை விதிமுறைகள் 5 ஆயிரத்துக்கும் குறைவான தொகையை மட்டும் அனுமதிக்கும் என்பதால் இந்த தொகையை அனுப்பி உள்ளார். இந்த தகவலை சிறை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த பணத்தை வைத்து அவர் சிறை கேண்டீனில் உணவு பொருள் வாங்கி சாப்பிடலாம், துணிகளை சலவை செய்ய கொடுக்கலாம். சிகை அலங்காரம் செய்து கொள்ளலாம்.