மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
கொரோனா இரண்டாவது அலைக்குப் பிறகு தியேட்டர்களை நோக்கி ரசிகர்கள் அதிகமாக வராமலே இருந்தார்கள். ஆனால், கடந்த வாரம் சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்திற்கு ரசிகர்கள் அதிக அளவில் வந்தனர். 50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்றாலும் அதற்கே பல தியேட்டர்களில் பல காட்சிகள் ஹவுஸ்புல் ஆகியுள்ளது. அது இந்த வாரமும் தொடர்வதாக தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சியாக உள்ளார்கள்.
அது மட்டுமல்ல நேற்று வெளியான 'அரண்மனை 3' படத்திற்கான விமர்சனங்கள் சரியாக இல்லை என்றாலும் அந்தப் படத்திற்கும் ரசிகர்கள் வருவது தியேட்டர்காரர்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியைத் தந்துள்ளது.
நேற்று முதலே தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், தமிழக அரசு இன்னமும் 50 சதவீத அனுமதியையே தொடர்கிறது. தீபாவளிக்காவது 100 சதவீத அனுமதி கிடைக்கும் என திரையுலகத்தினர் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.