ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி, கொரோனா தொற்றின் முதல் அலை வீசும்போதே பல சமூக பணிகளை செய்தார். தற்போது இரண்டாம் அலை வீசும் நேரத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையை உருவாக்கி வருகிறார். ஒவ்வொரு படுக்கைக்கும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதியும் செய்யப்படுகிறது. இதனை அவர் சில தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்த செய்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, நாங்கள் உருவாக்கும் மருத்துவமனைக்கு போதுமான ஆக்சிஜன் சிலிண்டர்கள், மருத்துவ உபகரணங்கள் வந்து விட்டது. விரைவில் இந்த பணி முடிவடையும் என்று தெரிவித்திருக்கிறார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி தமிழில் ரஜினி ஜோடியாக காலா படத்தில் நடித்தார். தற்போது அஜித்துடன் வலிமை படத்தில் நடித்து வருகிறார். பெல்பாட்டம் என்ற படத்தில் அக்ஷய்குமாருடன் நடித்து முடித்திருக்கிறார்.