ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கடந்த பத்தாண்டு காலமாக, தன் அழகாலும், நடிப்பு திறமையாலும், பாலிவுட் ரசிகர்களை கிறங்கடித்துக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு, மார்க்கெட் அவுட் ஆகி விட்டதாக, பாலிவுட்டில் வதந்தி உலா வருகிறது. "பிரியங்காவுக்கு மார்க்கெட் போச்சு. படங்கள் இல்லாமல், வீட்டில் உட்கார்ந்து, பொழுதை கழிக்கிறார் என, தொடர்ந்து வெளியாகும் வதந்தியால், கொதித்து போயிருக்கிறார், பிரியங்கா. "வேலை வெட்டி இல்லாதவர்கள் தான், இதுபோன்ற செய்தியை பரப்புகின்றனர். சமீபத்தில் கூட, நான் நடித்த, "பர்பி படம், வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. "திவானா மெயின் திவானா, க்ரிஷ்-3, சஞ்சீர் ஆகிய படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளன. "மிலன் டாக்கீஸ், குண்டாய் ஆகிய படங்களில் நடிப்பதற்கு "கால்ஷீட் கொடுத்துள்ளேன். அடுத்த இரண்டு ஆண்டுகள் வரை, "கால்ஷீட் ஹவுஸ்புல். நிலைமை இப்படி இருக்கும்போது, எனக்கு மார்க்கெட் இல்லை என, பொய் மூட்டையை அவிழ்த்து விட்டால், கோபம் வராதா என, சீறுகிறார், பிரியங்கா.