ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
ராஜிவ் காந்தியின் வாழ்கை வரலாறு பற்றிய திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. பாவ்னா தல்வார் என்பவர், இந்த படத்தை இயக்க உள்ளார். அவருடைய கணவர், ஷீத்தல் தல்வார், இந்த படத்தை தயாரிக்கிறார். இந்த படத்திற்கு, சோனியாவின் பூரண ஆசியை பெறும் வகையில்; கதை, திரைக்கதை, நடிகர்கள் பட்டியலோடு, தல்வார் தம்பதியினர், சோனியாவை அடுத்த மாதம் சந்திக்க உள்ளனர். தற்போது, நடிகர்களை இறுதி செய்யும் வேலை நடந்து வருகிறது. ராஜிவாக நடிப்பதற்கு, அபிஷேக் பச்சன், ரிஸ் அஷமத் மற்றும் ஹாலிவுட் நடிகர் காலின் பெர்த் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களில், அபிஷேக் பச்சனுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படம் குறித்து, ஷீத்தல் தல்வார் கூறுகையில், ""ராஜிவ் காந்தி, இந்திய சமுதாயத்தில், தொழில்நுட்ப ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் மாற்றத்தை கொண்டு வந்தவர். நாங்கள் தேர்வு செய்பவர், வெறும் நடிகராக மட்டும் அல்லாமல், ராஜிவின் உயர்ந்த கொள்கைகளை உள்வாங்கியவராக இருக்க வேண்டும், என்றார்.