ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் நம்பர் -1 இடத்தை பிடிப்பதற்காக, பிரியங்கா சோப்ராவும், கரீனா கபூரும், ஏற்கனவே குடுமி பிடி சண்டை நடத்திக் கொண்டிருப்பது தெரிந்த விஷயம்தான். சமீபத்தில், ஒரு இந்தி "டிவி சேனல்,ரன்பீர் கபூரும், பிரியங்கா சோப்ராவும்,இணைந்து நடித்த ஒரு படத்தின் விளம்பர நிகழ்ச்சிக்காக, ரன்பீரை அழைத்திருந்தது. ரன்பீரும், கரீனாவும், பாலிவுட்டின் பிரபலமான, கபூர் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.ஆனாலும், இருவரும் இணைந்து, இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றது இல்லை. இதனால், ரன்பீருடன், கரீனாவை மேடையேற்ற முடிவு செய்தது, அந்த சேனல்நிர்வாகம். கரீனாவும், ஓ.கே., சொல்ல, ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தன. இந்த நிகழ்ச்சியில், பிரியங்காவும் பங்கேற்க போகிறார் என, தெரிந்ததும் கரீனாவின் அழகிய முகம், கொடூரமாக மாறி விட்டது. "பிரியங்கா பங்கேற்கும், எந்த நிகழ்ச்சியிலும்,நான் பங்கேற்க மாட்டேன்என, பல்டி அடித்துவிட்டார். பிரியங்காவுக்கு, இந்த விவகாரம்தெரியவந்ததும், சேனல் தரப்பை கூப்பிட்டுவைத்து, அவரும், தன் பங்கிற்கு சாமியாடினார். "கரீனா, ஒரு இடத்தில் இருக்கிறார் என்றால், அந்த எல்லைக்குள்ளேயே, நான் கால் வைக்க மாட்டேன். அதேபோல், அவரும், என் எல்லைக்குள் கால் வைக்க கூடாது என,கறாராக உத்தரவிட்டுள்ளார்.