ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
கடந்த 1990களில், "ஏக், தோ, தீன், என, ஆட்டம் போட்டு, பாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த, மாதுரி தீட்ஷித், திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறி விட்டார். நீண்ட இடைவெளிக்கு பின், சமீபத்தில், பாலிவுட்டுக்கு திரும்பியுள்ளார் மாதுரி, திருமணமாகி விட்டதால், முன்பு போல், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க முடியாது என்பது, அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இதனால், திரைப்படங்களை தயாரித்து, காசு பார்ப்பது என, முடிவு செய்துள்ளார். தன்னுடைய திரைப்பட நிறுவனத்துக்காக, மும்பை புறநகர் பகுதியில் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தேடிக் கொண்டிருக்கிறார்."தயாரிப்பு மட்டும் தானா, படங்களை இயக்கும் எண்ணம் இல்லையா என்ற கேள்விக்கு, "இப்போதைக்கு, தயாரிப்பு மட்டும் தான். அது "கிளிக் ஆனால், மற்ற விஷயங்களை அப்புறம் பார்ப்போம் என, கண் சிமிட்டி சிரிக்கிறார்.