ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
இந்தி நடிகர் ராஜேஷ்கன்னா வாழ்ந்த வீடு மியூசம் ஆகிறது. உடல்நலக்குறைவால் மரணம் அடைந்த ராஜேஷ் கன்னா ராஜேஷ்கன்னா மும்பையில் வசித்தார். இவரது பங்களா வீட்டுக்கு ஆசீர்வாத் என பெயரிடப்பட்டு இருந்தது. ராஜேஷ்கன்னாவுக்கும் நடிகை டிம்பிள் கபாடியாவுக்கும் 1973-ல் திருமணம் நடந்தது. 11 வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இவர்களுக்கு டுவிங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள் உள்ளனர். டுவிங்கிள் கன்னா நடிகர் அக்ஷய்குமாரை திருமணம் செய்து கொண்டார். மனைவி டிம்பிள் கபாடியாவை பிரிந்த பிறகு தனது பங்களா வீட்டிலேயே ராஜேஷ்கன்னா வசித்தார். மகள்கள் அவ்வப்போது அவரை போய் பார்த்து வந்தனர்.
தற்போது ராஜேஷ்கன்னா வாழ்ந்த வீட்டை மியூசியமாக மாற்ற மகள்கள் இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனை ராஜேஷ்கன்னா குடும்பத்தினர் உறுதிபடுத்தியுள்ளனர். ஆசீர்வாத் பங்களாவை மியூசியமாக மாற்ற டுவிங்கிலும், ரிங்கியும் விரும்புவது உண்மைதான். அதற்கான திட்டம் இன்னும் உறுதியாகவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். மியூசியமாக மாற்றியதும் அதில் ராஜேஷ்கன்னாவுக்கு கிடைத்த விருதுகள், பரிசு பொருட்கள் போன்றவை அங்கு வைக்கப்படுகின்றன. ராஜேஷ்கன்னாவின் வாழ்க்கை வரலாறு அவரது அரிய புகைப்படங்கள் நடித்த படங்கள் பட்டியல், ஸ்டில்கள் போன்றவைகளும் வைக்கப்படுகின்றன.