ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
அமிதாப் பச்சனுடன் பணிபுரிந்தது கடவுளுடன் பணிபுரிந்த திருப்தியை தந்தது என்று டைரக்டர் ரோகித் ஷெட்டி கூறியுள்ளார். கோல்மால், சண்டே, கோல்மால் ரிட்டன்ஸ் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ரோகித் ஷெட்டி. இவர் இப்போது போல்பச்சன் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் அஜய் தேவ்கன், அபிஷேக் பச்சன், அசின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். படத்தில் அமிதாப் பச்சனை ஒரு பாட்டுக்கு ஆட வைக்க கேட்டுள்ளார் ரோகித். அமிதாப்பும் சம்மதம் சொல்லி, அந்த பாடல் காட்சியை சமீபத்தில் படமாக்கியுள்ளனர். இந்தபாட்டில் அமிதாப்புடன் இணைந்து அஜய் தேவ்கன், அபிஷேக் ஆகியோரும் நடனமாடியுள்ளனர்.
அமிதாப்பை வைத்து இயக்கியது குறித்து ரோகித் ஷெட்டி மகிழ்ச்சி பொங்க கூறியிருப்பதாவது, என் வாழ்வில் இனி இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்குமா என்று தெரியவில்லை. சினிமாவின் லெஜெண்ட்டான அமிதாப்பை வைத்து பாடல் இயக்கியது ரொம்ப சந்தோஷம். அமிதாப்புடன் பணிபுரிந்தது கடவுளுடன் பணிபுரிந்த ஒரு அனுபவத்தை எனக்கு தந்தது. என் சினிமா வாழ்வில் அவருக்கு மிக அருகில் நின்று போட்டோ எடுத்தது இதுதான் முதல்முறை. இன்னும் நான் அவருடன் பணிபுரிவது போன்ற உணர்வையே ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார்.