ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் |
தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனைமரத்தில் நெறிகட்டுமா என கேட்பதுண்டு.. அதை மெய்ப்பிப்பது போல வேன் உரிமையாளர் சங்கம் நடத்திய ஸ்ட்ரைக்கானது பிரபல பாலிவுட் நடிகரான அக்சய் குமாரை இயற்கை உபாதையை கழிக்க இடம் தேடி அலையவைத்து, ரொம்பவே அவஸ்தை படுத்தி விட்டது.
ஆம்.. அக்சய் குமார் தற்போது, 'கேசரி' என்கிற படத்தில் நடித்து வருகிறார். மகாராஷ்டிர மாநில அரசு திடீரென வாகன வரியை, மற்ற மாநிலங்களை விட பல மடங்கு உயர்த்தியதை எதிர்த்து அனைத்து வேன் உரிமையாளர் சங்கங்களும் ஒன்றாக இணைந்து ஸ்ட்ரைக் அறிவித்தனர். அதனால் அக்சய் குமார் நடிக்கும் 'கேசரி' படத்தின் படப்பிடிப்புக்கு வரவேண்டிய கேரவன் வரவில்லை.
படப்பிடிப்பு ஒய்வு நேரத்தில் காற்றாட வெளியே உட்கார்ந்துகொண்ட, அக்சய் குமார், இயற்கை உபாதையை கழிக்க கேரவன் இல்லாததால் ரொம்பவே அவஸ்தைப்பட்டு விட்டாராம். வெளிப்புற படப்பிடிப்பு என்பதால் மேக்கப் ரூமை உருவாக்கியவர்கள், கழிப்பறையை உருவாக்கவில்லை.. பின் படக்குழுவில் உள்ளவர்கள் சற்று தொலைவில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு அக்சய் குமாரை அழைத்து சென்று இயற்கை உபாதையை கழிக்க அவருக்கு ஏற்பாடு செய்து தந்தார்களாம்.