ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் படங்களில் தந்தை கேரக்டர் என்றால் அலோக்நாத் தான். நம்ம ஊர் நாசர், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ் மாதிரி நல்ல இமேஜ் உள்ள குணசித்தர நடிகர். இவர் மீது பிரபல ஹிந்தி பெண் இயக்குனர் விண்டா நந்தா பாலியல் புகார் கூறினார்.
விண்டா நந்தா தயாரித்த டி.வி தொடரின் நாயகியை அலோக்நாத் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் பகீர் புகார் தெரிவித்தார். இவர் தவிர பெயர் குறிப்பிடாத மேலும் இரு நடிகைகள் அலோக்நாத் மீது புகார் கூறினார்கள். இந்த புகார்களை மறுத்த அலோக்நாத், விண்டா நந்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விசாரிக்க பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் அலோக்நாத்தை அழைத்தது. அந்த அழைப்பை அலோக்நாத் நிராகரித்து விட்டார். "நீதிமன்றத்தின் முன்தான் விளக்கம் அளிப்பேன். மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை" என்று அவர் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதாலும், சங்கத்தின் விதிகளை மீறியதாலும் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விட்டது நடிகர் சங்கம்.