கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
பாலிவுட் படங்களில் தந்தை கேரக்டர் என்றால் அலோக்நாத் தான். நம்ம ஊர் நாசர், ஆடுகளம் நரேன், ஜெயபிரகாஷ் மாதிரி நல்ல இமேஜ் உள்ள குணசித்தர நடிகர். இவர் மீது பிரபல ஹிந்தி பெண் இயக்குனர் விண்டா நந்தா பாலியல் புகார் கூறினார்.
விண்டா நந்தா தயாரித்த டி.வி தொடரின் நாயகியை அலோக்நாத் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், மதுவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும் பகீர் புகார் தெரிவித்தார். இவர் தவிர பெயர் குறிப்பிடாத மேலும் இரு நடிகைகள் அலோக்நாத் மீது புகார் கூறினார்கள். இந்த புகார்களை மறுத்த அலோக்நாத், விண்டா நந்தா மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக விசாரிக்க பாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் அலோக்நாத்தை அழைத்தது. அந்த அழைப்பை அலோக்நாத் நிராகரித்து விட்டார். "நீதிமன்றத்தின் முன்தான் விளக்கம் அளிப்பேன். மற்றவர்களுக்கு விளக்கம் அளிக்கத் தேவையில்லை" என்று அவர் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி இருப்பதாலும், சங்கத்தின் விதிகளை மீறியதாலும் அவரை நடிகர் சங்கத்திலிருந்து நீக்கி விட்டது நடிகர் சங்கம்.