ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகை அனுஷ்காவும், கிரிக்கெட் வீரர் விராட் கோலியும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இருவரும் இந்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் தூதர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் இருவரும் காரில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சொகுசு காரில் சென்று கொண்டிருந்த ஒருவர் குப்பையை தெருவில் வீசியுள்ளார். இதனால் அவரை அனுஷ்கா சர்மா கண்டித்தார். இந்த காட்சிகளை வீடியோவாக எடுத்த விராட்கோலி அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
"உயர்தரமான சொகுசு கார்களில் பயணிக்கிறார்கள். ஆனால் மூளையை இழந்து விடுகிறார்கள். இவர்கள் நமது நாட்டை சுத்தமாக வைத்துக் கொள்வார்களா? இவர்களை பார்த்தால் விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்” என்ற கருத்தையும் பதிவு செய்து இருந்தார். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அனுஷ்கா சர்மா செயலுக்கு பாராட்டுகளும் குவிந்தன.
மறுநாளே குப்பையை வீசிய அர்ஹஜன் சிங் என்ற துணை நடிகர் மன்னிப்பு கேட்டார். இந்த நிலையில் அர்ஹஜன் சிங். விராட்கோலிக்கும், அனுஷ்கா சர்மாவுக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில், "நான் செய்தது சிறிய தவறு தான். அதற்காக என்னை கண்டித்தீர்கள் அதையும் ஏற்றுக் கொண்டு மன்னிப்பும் கேட்டேன். ஆனால் அதை நாடு முழுவதும் தெரிவித்து என் அனுமதியின்றி எனது வீடியோவையும் வெளியிட்டு எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டீர்கள். இதற்கு நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் உங்கள் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன்" என்று அந்த மனுவில் தெரிவித்திருக்கிறார்.