சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் |
ஹாலிவுட்டில் மிகவும், 'பிசி'யான நடிகையாகி விட்டார், பிரியங்கா சோப்ரா. அங்குள்ள முன்னணி நடிகையருக்கு சவால் விடும் வகையில், அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. இதனால், சில ஆண்டுகளாக, ஹிந்தி படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தவிர்க்க முடியாத வாய்ப்பை மட்டுமே அவர், ஒப்புக் கொண்டார்.
'இப்படியே போனால், பாலிவுட் ரசிகர்கள் உங்களை மறந்து விடுவர்' என, பாலிவுட் பிரபலங்கள், பிரியங்காவுக்கு அறிவுரை கூறியதை அடுத்து, அவரது மனது மாறியுள்ளது. விஷால் பரத்வாஜ் இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
'இந்த படத்துக்கு, பெரிய ஹீரோக்களை ஒப்பந்தம் செய்ய வேண்டாம். கதையும், அதில் என் கேரக்டரும் தான் முக்கியம். ஆண்டுக்கு ஒரு ஹிந்தி படத்தில் நடித்தாலும், அது, என் பெயரைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். அப்படி ஒரு கதையை தயார் செய்யுங்கள்' என, இயக்குனரிடம் கூறியுள்ளார், பிரியங்கா. இதையடுத்து, வித்தியாசமான கதையை தயார் செய்யும் பணியில், முழுவீச்சில் இறங்கியுள்ளார், இயக்குனர் விஷால் பரத்வாஜ்.