ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட்டில் சமூக நோக்கிலான விஷயங்களை மையப்படுத்தி சூப்பர் ஹிட் படங்களாக கொடுத்து வருபவர் பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி.. சில வருடங்களுக்கு முன் சர்ச்சைகளில் சிக்கி சரிந்து கிடந்த சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை, முன்னாபாய் எம்.பி.பி.எஸ்.மூலம் தூக்கி நிறுத்தியதும் இவர் தான், அமீர்கானின் இன்னொரு முகத்தை 3 இடியட்ஸ் மற்றும் பீகே மூலம் வெளிக்கொண்டு வந்தவரும் இவர்தான்..
தற்போது ரன்பீர் கபூரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக 'சஞ்சு' என்கிற படத்தை இயக்கிவரும் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்' படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக சில நாட்களுக்கு முன் அறிவித்தார். அதேசமயம் ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்பாக உள்ள 3 இடியட்ஸ் படத்தின் இரண்டாம் பாகத்தையும் கட்டாயம் எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார் ராஜ்குமார் ஹிரானி. இதற்கான ஸ்கிரிப்ட்டை எழுத கதாசிரியர் அபிஜீத்துடன் கதைவிவாதம் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.