ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் சல்மான்கான் எப்போதும் பிரச்னைகளில் சிக்கி கொண்டிருப்பவர். மான்வேட்டை வழக்கில் சமீபத்தில் விடுதலையாகி உள்ளார். சில சர்ச்சைக்குரிய படங்களிலும் நடித்திருக்கிறார். இதனால் சல்மான்கான் தனக்கு தனிப்பட்ட பாதுகாவலர்களை நியமித்துள்ளார்.
பொது நிகழ்ச்சிகளுக்கு செல்லும்போது பலத்த போலீஸ் காவலும் இருக்கும்.
கடந்த சில நாட்களாக திடீரென சல்மான்கானின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவரை கொலை செய்ய பெரிய அளவில் திட்டமிடப்பட்டிருப்பதாக உளவுத்துறை அளித்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் சல்மான்கானை கொல்ல சதி திட்டம் தீட்டியதாக பிரபல தாதா சம்பத் நெஹ்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பே ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டிருந்தாலும் இப்போதுதான் தகவல் வெளியாகி இருக்கிறது.
போலீசார் அவனிடம் விசாரணை நடத்தியபோது சல்மான்கானை கொலை செய்ய திட்டம் தீட்டி இருந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. மும்பையில் உள்ள சல்மான்கான் வீட்டுக்கு சென்று அவரை எப்படி கொலை செய்வது என்று ஆராய்ந்ததாகவும், இதற்காக சல்மான்கான் நடவடிக்கைகளை 2 நாட்கள் நோட்டம் விட்டதாகவும் போலீசாரிடம் தெரிவித்து உள்ளான்.
இதைத்தொடர்ந்து அரியானா போலீசார் அவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பத் நெஹ்ரா பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோ குழுவை சேர்ந்தவன் என்றும், அவன் மீது 12-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளன என்றும் போலீசார் தெரிவித்தனர். இது ஹிந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.