மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் |
இந்திய கோடீஸ்வரர்களில் ஒருவர் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன். அடிக்கடி வித்தியாசமாக எதையாவது செய்து பரபரப்பு கிளப்புவார். அந்த வரிசையில் நேற்று தனது மகளுடன் ஆட்டோவில் பயணித்து பரபரப்பு கிளப்பி உள்ளார்.
அமிதாப் நேற்று தனது மகள் ஸ்வேதாவுடன் ஒரு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கிளம்பினார். அவர் வீட்டின் முன்னால் பெரிய டிராபிக் ஜாம். காரை வீட்டை விட்டு வெளியே எடுக்க முடியவில்லை. இதனால் தன் மகளை அழைத்துக் கொண்டு ரோட்டுக்கு வந்த அமிதாப்பச்சன் அந்த வழியாக வந்த ஆட்டோவை கைகாட்டி நிறுத்தி தன் மகளுடன் ஏறிக்கொண்டார். அமிதாப்பச்சன் ஆட்டோவில் ஏறியதை கண்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஆட்டோ டிரைவர் டிராபிக்கில் புகுந்து வேகமா சென்று அவர் சொன்ன இடத்தில் இறக்கி விட்டார்.
உனது ஒரு நாள் வருமானம் எவ்வளவு என்று கேட்டார் அமிதாப்? அதற்கு டிரைவர் ஆயிரம் ரூபாய் என்று கூறியிருக்கிறார். உடனே அவரிடம் ஆயிரம் ரூபாயை கொடுத்து விட்டு. வீட்டில் போய் ரெஸ்ட் எடுங்க என்று கூறியிருக்கிறார். அமிதாப்பின் இந்த ஆட்டோ பயணம் பரபரப்பை ஏற்படுத்தியது. "கஷ்டத்திலும் அந்த ஆட்டோ டிரைவர் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து ஆச்சர்யம் அடைந்தேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார் அமிதாப்.