கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
சில வருடங்களுக்கு முன் சர்ச்சைகளில் சிக்கி சரிந்து கிடந்த சஞ்சய் தத்தின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்திய படம் தான் முன்னாபாய் எம்.பி.பி.எஸ். இந்தப்படத்தை பிரபல இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி இயக்கினார்.
இந்தபடம் தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் என்ற பெயரிலும், சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் தெலுங்கிலும், உப்பிதாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் கன்னடத்திலும் வெளியாகி பெரும் வெற்றியைப் பெற்றது நாம் அறிந்த வரலாறு..
இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2வது பாகமாக லஹே ரகோ முன்னாபாய் படத்தை இயக்கினார் ராஜ்குமார் ஹிரானி. இந்தப்படமும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனதுடன் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்க ரீமேக் செய்து அங்கேயும் பெரும் வெற்றி பெற்றது.
கடந்த பத்து வருடங்களாக முன்னாபாய் படத்தின் மூன்றாம் பாகம் எப்போது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்தநிலையில் தற்போது ரன்பீர் கபூரை வைத்து சஞ்சய் தத்தின் வாழ்க்கை வரலாறாக 'சஞ்சு' என்கிற படத்தை இயக்கிவரும் ராஜ்குமார் ஹிரானி, முன்னாபாய்' படத்தின் மூன்றாம் பாக வேலைகளை துவங்கிவிட்டதாக அறிவித்துள்ளார்.