ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல இந்தி நடிகை மற்றும் மாடல் அழகி மீனாட்சி தபா. இவர் கடந்த 2012ம் ஆண்டு அவரது நண்பர்களாலேயே கடத்தி செல்லப்பட்டு அவரது பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டப்பட்டார். பணத்தை கொடுக்காததால் மீனாட்சி தபாவை படுகொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசினர். தவறான சகவாசத்தால் மீனாட்சிக்கு இந்த முடிவு ஏற்பட்டது.
இது தொடர்பாக மீனாட்சியின் நண்பர்கள் அமித்குமார், அவரது காதலி பிரீத்தி சுரின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மும்பை செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி மீனாட்சியை அலகாபாத்துக்கு அழைத்துச் சென்றதாகவும், பின்பு கூலிப்படையை வைத்து அவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டியதையும் படுகொலை செய்ததையும் ஒப்புக்கொண்டனர். கடந்த 6 வருடமாக நடந்து வந்த இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றவாளிகள் இருவருக்கும் ஆயுள் தண்டனை அளித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.