ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பாலிவுட் நடிகர் சல்மான் கான் மீதான மான் வேட்டை வழக்கில், அவர் குற்றவாளி என அறிவித்து 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் கோர்ட் இன்று (ஏப்.,05) தீர்ப்பு வழங்கி உள்ளது.
1998 ம் ஆண்டு அக்டோபர் 1 ம் தேதி வனப்பகுதியில் படப்பிடிப்பிற்காக சென்றிருந்த போது அவ்வழியாக சென்ற மானை வேட்டையாடி தனது ஜிப்சி வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சல்மான் சென்றதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் வன விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சல்மான் கான், அவருடன் சென்ற சைப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சுமார் 20 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோத்பூர் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கியது. இதில், சல்மான் கான் குற்றவாளி என அறிவித்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் சல்மான் கான் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்கு நாளைக்கு வர இருக்கிறது.
சக நடிகர்களான சைப் அலிகான், தபு, சோனாலி, நீலம் ஆகியோர் இவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.