14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
இப்படி ஒரு ரசிகையா என அதிர்ந்து போய் இருக்கிறார் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்.. மலபார் ஹில்ஸ் பகுதியை சேர்ந்த நிஷி ஹரிச்சந்திரா திரிபாதி என்கிற பெண் சஞ்சய் தத்தின் தீவிர ரசிகையாம்.. தனது தாயுடன் வசித்துவந்த இவர் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டு இருந்தவர் சமீபத்தில் காலமானார்.
அவரது வங்கி கணக்கு மற்றும் லாக்கரை ஆய்வு செய்த வங்கி அதிகாரிக்கு, அவர் தனது இருப்பில் உள்ள பணம், லாக்கரில் உள்ள தனது பொருட்கள் அனைத்தும் சஞ்சய் தத்துக்கே சொந்தம் என உயில் எழுதி வைத்திருந்தது தெரிய வர அதிர்ச்சியானாராம்.
சஞ்சய் தத்தை அழைத்து இந்த விவரத்தை சொல்ல, ரசிகையின் அன்புகண்டு நெகிழ்ந்துபோன சஞ்சய் தத், அந்த ரசிகையின் பணம், பொருட்களை எல்லாம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கே கொடுத்து விடும்படி ஏற்பாடுகளை செய்துவிட்டாராம்.