ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர், ஆகியோரது நடிப்பில் உருவான பத்மாவத் படம், கடும் எதிர்ப்புகளுக்கு இடையே கடந்த வியாழன் அன்று ரிலீஸானது. படத்திற்கு எழுந்த எதிர்ப்பே பிளஸ்ஸாக மாற வசூலை குவித்து வருகிறது பத்மாவத் படம். இதனால் தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இப்படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி மும்பையில் நடந்தது. இதில் பங்கேற்ற தீபிகாவிடம், பத்மாவத் படத்தில் உங்களை கவர்ந்த காட்சி எது என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், கில்ஜி - ராவல் இடையேயான சண்டை தான் எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி. இந்த காட்சி படமாக்கப்பட்டபோது நானும் இருந்தேன். இரண்டு பெரிய ஸ்டார்கள் இதுபோன்று சண்டையிட்டது இல்லை. இருவரும் நிஜமாகவே ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சண்டையிடுவது போன்று இருந்தது என்றார்.
பத்மாவத் படம் ரூ.100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைந்துள்ளது. மேலும் வசூல் சிறப்பாக இருப்பதால் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்கிறார்கள்.