மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
பத்மாவத் படத்தில் ரன்வீர் சிங்கின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டும், பாராட்டப்பட்டும் வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது ரன்வீரிடம், ஆங்கில மொழி படங்களில் நடிக்க விரும்புகிறீர்களா என கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த ரன்வீர் சிங், ஆங்கில மொழியில் ஏதாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன். நான் பள்ளியில் படிக்கும் போது ஆங்கில வழியில் தான் படித்தேன். ஆங்கிலம் எனது முக்கிய மொழிப் பாடங்களில் ஒன்றாக இருந்தது. நான் அமெரிக்காவில் படித்தவன். அதனால் எனது இன்னொரு மொழியாக ஆங்கிலத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என விரும்புகிறேன்.
ஆங்கில படங்களில் நடிக்க சில வாய்ப்புக்கள் கிடைத்தது. ஆனால் சில காரணங்களால் அவற்றில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் சரியான நேரம் வரும் போது, சரியான படம் ஒன்றில் நடிப்பேன் என நினைக்கிறேன். அதிலும் நல்லதொரு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் என நினைக்கிறேன் என்றார். பத்மாவத் படத்தை தொடர்ந்து தற்போது குல்லி பாய், சிம்பா ஆகிய படங்களில் ரன்வீர் நடித்து வருகிறார்.