ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சர்ச்சையை கிளப்பிய பத்மாவத் படத்திற்கு 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை சுப்ரீம் கோர்ட் நீக்கியுள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், சாகித் கபூர் நடிப்பில் உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் மகாராணி பத்மாவதி வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி இப்படத்திற்கு ராஜபுத்ர வம்சத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்த டிசம்பர் மாதமே வெளியாக வேண்டிய படம் முடங்கியது.
பின்னர் சென்சார் போர்டின் அறிவுரைப்படி படத்திற்கு 26 கட்டுகளுடன் யு/ஏ கொடுக்கப்பட்டது. அதோடு படத்தின் தலைப்பும் மாற்றப்பட்டது. இதையடுத்து படம் வருகிற ஜன., 25-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டது. ஆனாலும் பத்மாவத் படத்தை திரையிடவிட மாட்டோம் என பல மாநிலங்களில் கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்த்து தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாக மாநில சட்ட ஒழுங்கை கருத்தில் கொண்டு, ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இப்படத்திற்கு மாநில அரசுகள் தடை விதித்தன.
இதை எதிர்த்து பத்மாவத் தயாரிப்பாளர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 4 மாநிலங்களில் விதிக்கப்பட்ட தடையை நீக்கினார். அதோடு, பிற மாநிலங்களும் பத்மாவத் படத்திற்கு தடை விதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். மேலும் படங்களுக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது அடிப்படை கட்டமைப்புகளை சீரழிக்கும். பிரச்னை என்றால் சம்பந்தப்பட்டவர்கள் தீர்ப்பாயம் செல்ல வேண்டுமே தவிர தடை விதிக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த அதிரடி உத்தரவால் திட்டமிட்டபடி படம் ஜன., 25-ம் தேதி ரிலீஸாகிறது.