ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில், தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாகித் கபூர் ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்க உருவாகி உள்ள படம் பத்மாவத் (பத்மாவதி). சித்தூர் ராணி பத்மாவதி, முகலாய மன்னன் அலாவுதீன் கில்ஜியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் பத்மாவதியை தவறாக சித்தரித்துள்ளதாக கூறி ராஜபுத்ர சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பல்வேறு காட்சிகளை நீக்கும் உத்தரவுடன், திரைப்பட தணிக்கை வாரியம், இந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் அளித்தது. அதோடு படத்தின் பெயரும் மாற்றப்பட்டு பத்மாவத் என்ற பெயரில், வருகிற ஜன., 25-ல் வெளியாக உள்ளது. அதேநேரத்தில், இந்த படத்தை வெளியிடுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு உள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஹரியானா போன்ற மாநிலங்களில் இப்படத்தை திரையிடப்போவது இல்லை என அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில் பத்மாவத் படத்தின் தயாரிப்பாளர்களான அஜித் அந்தாரே மற்றும் சஞ்சய் லீலா பன்சாலி ஆகியோர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு ஒன்று போட்டுள்ளனர். அதில் சென்சார் போர்டு அனுமதித்தும், பல்வேறு மாநிலங்களில் படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை நீக்க வேண்டும் என்று தங்களது மனுவில் கோரியுள்ளனர். இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டுள்ளது. விரைவில் வழக்கு விசாரணைக்கு வரும் என தெரிகிறது.