ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தன் மகள் ஆராத்யா ஓரளவுக்கு பெரிய குழந்தையாகிவிட்டதால் மீண்டும் சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய். தற்போது ஒரு படத்தில் நடித்து வருபவர், அடுத்தப்படியாக ஸ்ரீ நாராயண் சிங் தயாரிப்பில், சித்தார்த் கதையில், கரிமா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். படத்திற்கு ஜாஸ்மின் என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தில் அவர் வாடகை தாயாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகும் இப்படம் குழந்தை சம்பந்தப்பட்ட படம் என்பதால் ஐஸ்வர்யா ராயும் மிகவும் ஆர்வமாய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.