ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன். நடிகராக மட்டுமல்லாது இயக்குநர், தயாரிப்பாளராகவும் உள்ளார். தற்போது தனது மனைவி கஜோல் நடிப்பில் ஒரு படத்தை தயாரிப்பவர், முதன்முறையாக மராத்தி சினிமாவில் ஒரு படத்தை தயாரிக்கிறார். படத்திற்கு ஆப்லா மனுஷ் என்று பெயரிட்டுள்ளனர். நானா பட்டேகர், சுமீத் ராகவன் முதன்மை ரோலில் நடிக்க, சதீஷ் ராஜ்வாடே இயக்குகிறார்.
இதுகுறித்து அஜய் தேவ்கன் கூறுகையில், சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். நான் பிறந்ததில் இருந்து மஹாராஷ்ட்டிரா மாநிலத்துடன் தொடர்பில் உள்ளேன். மராத்தி மொழி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். கஜோலை திருமணம் செய்த பின்னர் அந்த மொழியின் மீது மேலும் ஈர்ப்பு அதிகமாகிவிட்டது. மராத்தி சினிமாவிற்கு என்று ஒரு தனி வழி உள்ளது. இதில் நானும், ஆப்லா மனுஷ் படம் மூலம் இணைகிறேன் என்று கூறியுள்ளார்.