14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா |
புக்ரே படத்தின் இரண்டாம் பாகமாக "புக்ரே ரிட்டர்ன்ஸ்" உருவாகி உள்ளது. வரும் வெள்ளியன்று ரிலீஸாகும் இப்படம் பற்றியும், இதில் நடித்த அனுபவம் பற்றியும் நடிகை ரிச்சா சத்தா நம்மோடு பகிர்ந்து கொண்டதாவது...
போலி பஞ்சாபன் கேரக்டருக்கும், உங்க வாழ்க்கைக்கும் எந்தளவு ஒற்றுமை உள்ளது?
என் ரியல் வாழ்க்கை நிச்சயம் போலி பஞ்சாபன் உடன் ஒத்து போகாது. ஏனென்றால் போலி கேரக்டரை பொறுத்தமட்டில் குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல கிரிமினல் வேலைகளை செய்பவள். அதனால் அந்த கேரக்டர் என் நிஜ வாழ்க்கையோடு எந்த விதத்திலும் ஒத்து வராது. நான் ஒருபோதும் அப்படியாக நினைத்தது இல்லை.
திகார் சிறையில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்த அனுபவம் குறித்து சொல்லுங்க?
உண்மை தான், திகார் சிறையில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் எனக்கான காட்சி, சிறையின் வாயில் வரை மட்டும் தான், அதனால் உள்ளே நடந்த படப்பிடிப்பு அனுபவம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் வித்தியாசமாக சிறை இருந்தது. கைதிகள் எல்லோரும் அவரவர் வேலையை செய்து வந்தனர். அதேசமயம் சிறையில் ஆடல், பாடல் போட்டியெல்லாம் நடந்தது. அதை என்னால் ரசிக்க முடியவில்லை.
புக்ரே வெற்றியால் இப்படமும் வெற்றி பெறனும் என்கிற பயமோ அல்லது ஒரு அழுத்தமோ உள்ளதா?
உண்மையை சொல்ல வேண்டுமென்றால் ஷூட்டிங்கின் போது ஒருவித பயம் எனக்குள் இருந்தது. புக்ரேயில் என்னுடைய கேரக்டரை ரசிகர்கள் மிகவும் ரசித்தார்கள், பாராட்டினார்கள். தற்போது புக்ரே படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். இது எனக்குள் நம்பிக்கையை தந்துள்ளது. கதை, இயக்குநர், தயாரிப்பாளர், படத்தொகுப்பாளர் என எல்லாமும் சிறப்பாக அமைந்துவிட்டால் நிச்சயம் படம் வெற்றி தான். இருந்தாலும் எனக்குள் ஒரு பயம் உள்ளது.
புக்ரே ரிட்டர்ன்ஸிலும் உங்களுக்கு நெகட்டீவ் கேரக்டர் மாதிரி தோன்றுகிறதே?
புக்ரேயில் நெகட்டீவ் கேரக்டர் என்று சொல்ல முடியாது. ஆனால், புக்ரே ரிட்டர்ன்ஸில் வில்லன் மாதிரியான கேரக்டர் தான். படத்தில் ஒரு முக்கியமான வில்லன் உள்ளார். டிரைலரில் அவரை காண்பிக்கவில்லை. படத்தில் பார்ப்பீர்கள்.
சினிமாவில் திறமை - சிபாரிசு எது முக்கியம்?
திறமை, சிபாரிசு இரண்டுக்கும் சினிமாவில் பட வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஒரு வித்தியாசம் இருக்கிறது. சிபாரிசு என்றால் உடன் வாய்ப்பு கிடைக்கும். திறமை சற்று தாமதமாக கிடைத்தாலும் அதற்கான வேலை சிறப்பாக இருக்கும். திறமை இருந்தால் நிச்சயம் உங்களை தேடி வாய்ப்பு வரும், அதுவே, உங்களது பெயரை சிலர் சிபாரிக்கவும் சொல்லும்.
எதையும் நேராக பேசக்கூடியவர் நீங்கள், இதனால் உங்களுக்கு ஏற்படும் நன்மை, தீமை என்ன?
நன்மை, தீமை என்று சொல்ல முடியாது. எதையும் நேராக பேசுவது எனக்கு இயற்கையாகவே அமைந்துவிட்டது. நான் இப்படி இருப்பது பிடித்திருக்கிறது. மக்களை பிரதிபலித்தே எனது கருத்தை நான் முன் வைப்பேன். நம் நாட்டில் பேச்சுரிமை உள்ளது. ஆகையால் எதையும் சொல்ல தயங்க வேண்டியது இல்லை. அதேப்போல் மற்றவர்களும் அவர்களின் கருத்தை சொல்ல தயங்க கூடாது.