ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
பிரபல பாலிவுட் நடிகர் வருண் தவான். ஸ்டூடன் ஆப் தி ஈயர், மெயின் தேரே ஹோ, பட்லாபூர், ஏபிசிடி 2, திவாலே, ஜூட்வா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது சுசி தகா, அக்டோபர் படங்களில் நடித்து வருகிறார். வருண் தவான் ஒரு செல்பி பிரியர். பிடித்தமானவர்கள் யாரைப் பார்த்தாலும் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொள்வது அவரது ஹாபிட். ஆனால் அந்த பழக்கம் அவரை ஒரு சிக்கலில் மாட்டி விட்டிருகிறது.
மும்பையில் பரபரப்பான சாலை ஒன்றில் வருண் தவான் காரில் சென்று கொண்டிருந்தபோது ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ரசிகை ஒருவர் வருணை அடையாளம் கண்டு கை காட்டியுள்ளார். அந்த ரசிகையை வருணுக்கு பிடித்துக் போக அவருடன் செல்பி எடுத்துள்ளார். எப்படி என்றால் அவர் ஆட்டோவில் அமர்ந்திருக்க, இவர் காருக்குள் அமர்ந்திருக்க இருவரும் வெளியில் தலையை நீட்டி செல்பி எடுத்திருக்கிறார்கள். இது போக்குவரத்து விதிமுறையை மீறிய செயல் என்றும், ஆபத்தானது என்றும் நெட்டிசன்கள் கருத்து பதிவிட விஷயம் காவல்துறை வரைக்கும் சென்றது.
போலீசார் வருண் தவானக்கு அபராதம் விதித்திருப்பதுடன் எச்சரித்தும் உள்ளது. இது தொடர்பாக வருண் தவான் தனது பேஸ்புக்கில் "ஒரு ரசிகையின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் செல்பி எடுத்தேன். அதுவும் கார் நின்று கொண்டிருக்கும்போது தான். என்றாலும் அது தவறுதான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.