விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
அருந்ததி படத்தின் மூலம் பிரபல நடிகையானவர் அனுஷ்கா. ரஜினி, விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து விட்ட அவர், ஹீரோக்களுக்கு இணையாக வெயிட்டான கதைகளிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்தவர். அந்த வகையில், அருந்ததியைத் தொடர்ந்து, ருத்ரம்மா தேவி, பாகுபலி, பாகுபலி-2 உள்ளிட்ட சில படங்கள் அனுஷ்காவின் நடிப்பாற்றலுக்கு சான்றாக அமைந்தன.
இந்த நிலையில், தற்போது பாக்மதி என்ற படத்தில் நடித்திருக்கும் அனுஷ்காவின் புதிய படம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. இந்த நேரத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியில், பாகுபலி-2விற்கு பிறகு பாக்மதி படத்தில் வெயிட்டான கதையில் நடித்திருக்கிறேன். இதன்பிறகு முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தாலும், எனக்கும் கதையில் முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே நடிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். அதனால் நான் எதிர்பார்க்கிற மாதிரியான கதைகளுக்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார் அனுஷ்கா.