ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உள்ள மெர்சல் படம், ரிலீசுக்கு முன்பும், ரிலீசுக்கு பிறகும் சர்ச்சையாக்கப்பட்டு உள்ளது. மெர்சல் படத்திற்கு ஆதரவுகளும், எதிர்ப்புக்களும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை சொன்ன விஜய், அட்லிக்கு நடிகர் விஷால் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், மெர்சல் படத்தில் மக்களுக்கு சமூக கருத்துக்களை எடுத்துரைத்த விஜய், அட்லிக்கு பாராட்டுக்கள். மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள், காட்சிகளை நீக்க சொல்லி வற்புறுத்துவது கருத்து சுதந்திரத்திற்கு விடுக்கப்பட்ட மிரட்டல். தணிக்கை செய்த படத்தை மீண்டும் தணிக்கை செய்ய சொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை. ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபரையே விமர்சி்க்கும் காட்சிகளும், வசனங்களும் இடம்பெறுகின்றன. அது தான் ஜனநாயக சட்டம் வழங்கி உள்ள கருத்து சுதந்திரம்.
ஒரு சில அரசியல் கட்சிகள் தீர்மானிக்கும் வசனங்கள், காட்சிகள் மட்டும் தான் சினிமாவில் இடம்பெற வேண்டும் என்றால், தணிக்கை குழு எதற்கு? தான் நினைத்ததை சொல்லும் முழு கருத்து சுதந்திரம் அனைவருக்கும் உண்டு. எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம் என விஷால் தெரிவித்துள்ளார்.